
بسم الله الرحمان الرحيم
ஹதீஸ்கள்
கலிமா தய்யுபா
1.
عن ابي هريرة رضي الله عنه قال
:قال رسول الله صلى الله عليه وسلم:
الايمان بضع وسبعو
شعبة فافضلها قول لااله الاالله وادناها اماطة الاذى
عن الطريق والحياء شعبة من الايمان
ஹஜ்ரத் அபூ ஹூரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் : ஈமானுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளனஅவற்றில் மிகச் சிறந்தது, லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுவதாகும். அவற்றில் மிகத் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். மேலும் வெட்கம் ஈமானின் ஒரு பிரிவாகும் என்று திரு நபி (ஸல்) அவர்கள் திருவுளமானார்கள்.
( நூல் : முஸ்லிம் )
2.
عن ابي بكر رضي الله عنه قال : قال رسول اللهصلى الله عليه وسلم
من قبل مني الكلمة التي عرضت علي عمي فردها
علي فهي له نجاة
ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அறிவிக்கிறார்கள் : என் பெரிய தந்தை ( அபூதாலிபு ) க்கு ( அவரின் மரண சமயத்தில் ) நான் சொல்லிக் கொடுத்து, அவர் ஏற்க மறுத்த அந்தத் திருக்கலிமாவை எவர் ஏற்றுக்கொள்வாரோ அது அவருக்கு ஈடேற்ற (த்திற்குக் காரண) மாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
( நூல் : முஸ்னத் அஹ்மத் )
3.
عن ابي هريرة رضي الله عنه قا ل
قال رسول الله صلى الله عليه وسلم
جددوا ايمانكم قيل يا رسول الله! وكيف نجددو ايماننا؟ قال
اكثروا من قول لا اله الا الله
உங்கள் ஈமானைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் திருதூதரே ! எங்கள் ஈமானை எவ்வாறு நாங்கள் புதுப்பிப்பது ? என்று கேட்கப்பட்டது லா இலாஹ இல்லல்லாஹ் என்று அதிகமாகக் கூறிக் கொண்டே இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் .
( நூல் : முஸ்னத் அஹ்மத் , தப்ரானீ , தர்கீப் )
4.
عن جابربن عبد الله رضي الله عنهما يقول
سمعن رسول الله صلى الله عليه وسلم يقول افضل الدْكر
لا اله الا الله وافضل الدعاء الحمد لله
திக்ருகளில் சிறந்தது "லா இலாஹ இல்லல்லாஹ் " துஆக்களில் மிகச் சிறந்தது, "அல்ஹம்துலில்லாஹ் " என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டுள்ளதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
( நூல் : திர்மிதீ )
5.
عن ابي هريرة رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم
ما قال عبد لا اله الا الله قطُ مخلصا الا قتحت له ابواب
السماء حتى تفضى الى العرش ما اجتتب الكبائر
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஓர் அடியான் " லா இலாஹ இல்லல்லாஹ் " என்று உளத்தூய்மையுடன் கூறும் போது அந்தக் கலிமாவுக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, நேரடியாக அந்தக் கலிமா அர்ஷைச் சென்றடைகிறது. (அதாவது) உடனே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இது அவர் பெரும் பாவங்களிலிருந்து விலகியிருக்கும் வரை என்று திருநபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் .
( நூல் : திர்மிதீ )
6.
عن يعلى بن شداد قال حدثني ابى شداد وعبادة بن الصامت رضى الله عنهما حاضر يصدقه قال: كنا عند النبى صلى الله عليه وسلم فقال: هل فيكم غريب يعني اهل الكتاب؟ قلنا: لا يارسول الله! فامر يغلق الباب وقال: إرفعوا ايديكم وقولوا: لا اله الاالله فرفعنا ايدينا ساعة، ثم وضع صل الله عليه وسلم يده قال: الحمد لله، اللهم انك بعشتنى بهده الكلمة وامرتنى بها ووعدتنى عليها الجنة وانك لا تخلف الميعاد، ثم قال الا ابشروا فان الله قد غفر لكم
ஹஜ்ரத் யஃலா இப்னு ஷத்தாத் (ரலி) அறிவிக்கிறார்கள் : என் தந்தை ஹஜ்ரத் ஷத்தாத் (ரலி) பின்வரும் நிகழ்வை விளக்கினார்கள் . அந் நிகழ்வின் சமயத்தில் என் தந்தையாருடன் இருந்த ஹல்ரத் உபாதத் இப்னு ஸாமித் (ரலி) அவர்களும் அதை உண்மைப் படுத்துகிறார்கள் .
ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் சன்னிதானத்தில் நாங்கள் இருந்தோம் . உங்களில் அந்நியர் (முஸ்லிமல்லாதவர்) யாரேனும் உண்டா ? என நபி (ஸல்) அவர்கள் வினவ யாருமே இல்லை அல்லாஹ்வின் திருத்தூதரே! என நாங்கள் பதிலளித்தோம் கதவை மூடச் சொல்லி உத்தரவிட்டுப் பின்பு உங்கள் கைகளை உயர்த்தி லா இலாஹ இல்லல்லாஹ் என கூறுங்கள் என்று சொன்னார்கள், நாங்கள் கொஞ்ச நேரம் எங்கள் கைகளை உயர்த்தியிருந்தோம் கலிமாவும் கூறினோம் பிறகு நபி (ஸல்) அவர்கள் தங்கள் கையைத் தாழ்த்தி அல்ஹம்துலில்லாஹ் எனக் கூறி இறைவா இக்கலிமாவைக் கொடுத்து என்னை அனுப்பியிருக்கிறாய்! மேலும் இதை (எடுத்துரைக்க) எனக்கு கட்டளை பிரப்பித்துள்ளாய் மேலும் இந்த களிமாவுக்காகச் சுவனம் தருவதாக வாகளித்திருக்கிறாய் நீ வாக்குறுதிக்கு மாற்றம் செய்யமாட்டாய் என்று சொன்னார்கள் அதன் பின் எங்களைப் பார்த்து உங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்ற சுபச் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள் .
(நூல் : முஸ்னத் அஹ்மத் , தப்ரானீ , பஜ்ஜார் , மஜ்மவுஜ்ஜவாயித் )
7.
عن ابي دْر رضي الله عنه قال قال النبى صلى الله عليه وسلم ما من عبد قال لا اله الاالله ثم مات على دْلك الا دْخل الجنة قلت وان زنى وان سرق؟ قال وان زنى وان سرق، قلت وان زنى وان سرق؟ قال وان زنى وان سرق على رغم انف ابى دْر
ஹஜ்ரத் அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள் அடியான் லா இலாஹ இல்லல்லாஹ் எனக் கூறிய பிறகு அதன்படியே மரணித்துவிட்டால், அவன் சுவனத்தில் நுழைவான் என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, அவர் விபச்சாரம் செய்திருந்தலுமா? திருடியிருந்தலுமா? எனக் கேட்டேன் , (ஆம்) அவர் விபச்சாரம் செய்திருந்தாலும், திருடியிருந்தாலும் என பதிலளித்தார்கள். அவர் விபச்சாரம் செய்திருந்தலு, திருடியிருந்தலுமா? என திரும்பவும் நான் கேட்டேன் அவர் விபச்சாரம் செய்திருந்தாலும் திருடியிருந்தாலும் சரியே என மறு முறையும் பதிலளித்தார்கள், மூன்றாவது தடவை, அவர் விபச்சாரம் செய்திருந்தாலும் திருடியிருந்தாலுமா? எனக் கேட்டேன். அவர் விபச்சாரம் செய்திருந்தாலும் திருடியிருந்தாலும் சரியே! அபூ தர்ருடைய மனம் விரும்பாவிட்டாலும், அவர் கண்டிப்பாகச் சுவனம் செல்வார் என்று பதில் கூறினார்கள்.
(நூல்: புஹாரி)
8.


